districts

img

வீட்டு வசதி துணைப் பதிவாளரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப்.10-  செங்கல்பட்டு மாவட்ட  வீட்டு வசதி துணைப் பதிவா ளரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழி யர் சங்கம் சார்பில்  ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை பழங்காநத்தத் தில் உள்ள  இணைப்பதிவா ளர் அலுவலகம் முன்பு திங்க ளன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநி லச் செயலாளர் க.சந்திர போஸ், மாவட்டத் தலைவர் எஸ்.முருகன், மாவட்டச் செயலாளர் எஸ்.சீனியப்பா, மாவட்ட பொருளாளர் ம. தீனதயாளன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் க.நீதிராஜா, ஆ.பரம சிவம், மு.ராம்தாஸ், இரா.தமிழ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிவகங்கையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு துறை ஊழியர்  சங்கம் மாநிலச் செயலாளர்  த.வினோத் ராஜா, மாவட்டத் தலைவர் தி.ஜெயப்பிர காஷ், மாவட்டச் செயலாளர்  அ.கிங்ஸ்டன் டேவிட், பொன் னையா, அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் கண்ண தாசன், மாவட்டச் செயலா ளர் இராதாகிருஷ்ணன் மூவேந்தன், முத்தையா சின்  னப்பன் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்  கேற்றவர்கள், செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவா ளர் மு.உமா தேவி தமது அலு வலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தரக்குறை வாக, கண்ணியமற்ற முறை யில் பேசுகிறார். அலுவலக் ஊழியர்கள் மீது அடிக்கடி  குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்குகிறார். மாதாந்திர ஊதியப்பட்டியலில் கை யொப்பம் இடுவதை தவிர்க்  கிறார். உயர் அதிகாரிகளை இழிவாகப் பேசி துறைக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். எனவே செங்கல்பட்டு மாவட்ட வீட்டு வசதி துணைப்  பதிவாளர் மு. உமா தேவி யை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.