இராஜபாளையம்,டிச.31- இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் தாராபுரம் அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்திற்கு புதிய சாலை, தெரு விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சத்திரப்பட்டியை அடுத் துள்ள திருக்கோதையாபுரம் விலக்கு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலா ளர் சுந்தரபாண்டியன் , ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி முத்து மாரி, சிபிஎம் ஒன்றிய செயலா ளர் முனியாண்டி , விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பேசினர்.