districts

img

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராணுவத்தை ஆர்எஸ்எஸ்மயமாக்கும் வகையிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஒழிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கண்டித்தும் இதனை திரும்பப்பெறக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஜூன் 28 செவ்வாயன்று இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகாச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தாலுகா செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.