மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் மக்கள் விரோத ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த மோடி அரசைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரம் தாலுகா தங்கச்சிமடத்தில் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி. சிவா , மாவட்டக்குழு உறுப்பினர் ஜஸ்டின் ஆகியோர் பேசினர்.