திருப்பூர், டிச. 19 - பஜாஜ் நிறுவனத்தில் கடன் வாங் கிய சாமானிய மக்களை, சட்டவிரோத மான முறையில் குண்டர்களை வைத்து மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கும் அந் நிறுவனத்தின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திங்களன்று காலை திருப்பூர் குமார் நகரில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் அலு வலகம் முன்பாக விடுதலைச் சிறுத்தை கள் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இணைந்து இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். கடன் தவணைத் தொகை கட்டி னால், கடன் வாங்கிய தொகையைக் காட்டிலும் கூடுதலாக வட்டி, வட்டிக்கு வட்டி என்று அதிகமாக வசூலிப்பது, பணம் கட்டி முடிக்கப்பட்டதும் அதற் கான என்.ஒ.சி. சான்றிதழ் தர மறுப்பது, கடன் செலுத்த தாமதம் ஆனால் அவர்க ளைத் தரக்குறைவாக பேசுவது என செயல்படும் பஜாஜ் நிறுவன ஊழியர்க ளையும், நிர்வாகத்தையும் கண்டித்தும், அவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப் பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில், செவ்வாயன்று பஜாஜ் அதிகாரிகளையும், பாதிக்கப்பட்டவர்க ளையும் வடக்கு காவல் நிலையத்துக்கு வரவழைத்து பிரச்சனை குறித்து விசா ரித்து தீர்வு காண்பதாக உறுதியளித்த தாகவும், பிரச்சனை தீராத பட்சத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற் றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்வேந்தன் தெரிவித்தார்.