வன்முறையற்ற புத்தாண்டை வரவேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் போடி, பண்ணைப்புரம், பெரியகுளம், புல்லக்காபட்டி, தேவதானப்பட்டி, வடுகபட்டி ஆகிய இடங்களில் பலூன் பறக்கவிடப்பட்டு கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் எஸ். மீனா, மாவட்டச் செயலாளர் பி. சித்ரா, மாவட்ட துணைத் தலைவர் எஸ். வெண்மணி, மாவட்ட நிர்வாகி கே. கோமதி, உள்பட பலர் பங்கேற்றனர்.