districts

img

மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

விருதுநகர், அக்.9- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரிந்த பெண் சுகா தார பணியாளர்கள் அனைவரை யும் பணி நிரந்தரம் செய்திட வேண்  டும். மாதம் ரூ.26ஆயிரம் ஊதியம்  நிர்ணயம் செய்ய வேண்டும். தற்  போது வழங்கும் ஊக்கத்தொகை யை மாதந்தோறும் நேரடியாக ஊழி யர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். கருவுறும் ஊழியருக்கு மகப்பேறு கால சலுகை வழங்க  வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எப், கிரா ஜூட்டி சட்டங்களை அமுல்படுத்து வதோடு, பணிநேரத்தை வரன் முறை செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மக்க ளைத் தேடி மருத்துவ சங்கம் (சிஐ டியு) சார்பில் கவனயீர்ப்பு போராட்  டம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நந்தினிதேவி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரை யாற்றினார். இதில் சிஐடியு மாவட்  டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பால சுப்பிரமணியன், எம்.சாராள், பி.ராமர், எம்.திருமலை ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.  இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, மக்களை தேடி மருத் துவ ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பி.லில்லி பாக்கியம், மாவட் டப் பொருளாளர் வி.ஜாக்லின், மாவட்டத் துணைத் தலைவர் வி.வள்ளி, மாவட்ட துணைச் செயலாளர் கனகவீரலட்சுமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.