நாகர்கோவில், ஆக. 1 தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்ப பெற கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் மற்றும் அரசா ணை எம் எஸ் எண் . 5 ஐ முழுமையாக அமல்படுத்த கோரியும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JAC) மற்றும் AIFUCTO சார்பாக ஆகஸ்ட் 1 காலை தெ.தி. இந்துக் கல்லூரி வாசலில் கோரிக்கை அட்டை அணிந்து வாயிற் முழக்க போராட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் முனைவர். ஐயப்பன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முனைவர் மகேஷ் வாழ்த்தி பேசினார். கிளை இணைச்செயலாளர் முனைவர். வெற்றி கமிலஸ்,. முன்னாள் தலைவர் முனைவர் இராதாகிருஷ்ணன் பேசினர். முனைவர். சுப்பையா நன்றியுரை ஆற்றினார்.