விருதுநகர், செப்.1- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ஏகம் மற்றும் காக்னிசன்ட் பவுண்டேசன் சார்பில் ரூ.35.40 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட எக்கோ இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில், கல்லூரி முதல்வர் சங்குமணி, பவுன்டேசன் இணை நிறுவனர் லதாபாண்டியராஜன், பொது மேலாளர் ராஜேஷ், மருத்துவர்கள் ஜவஹர், முருகேச லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.