districts

img

சம்மட்டிபுரம் வழியாக மினி பேருந்துகள் இயக்கத் திட்டம்

மதுரை, ஜூலை 19- மதுரை கோச்சடை  அருகே தேனி சாலை யில் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி சுமார் இரண்டு மாதங்களாக நடைபெறவில்லை. இதனால்  நூற்றுக்கணக்கான வாகனங்கள் அருகி லுள்ள டோக் நகருக்குள் திருப்பி விடப்படு கின்றன, இதனால் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர் பகுதி மக்கள்.  தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மதுரைக் கோட்டம் சார்பில் மதுரை- தேனி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 1,100 மீட்டருக்கு பாலம் அமைக்கும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கியது. முதற்கட்டமாக முடக்குசாலை சந்திப்பு  முதல் எச்எம்எஸ் காலனி சந்திப்பு வரை  கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருவழிப் பாதை அறிமுகப் படுத்தப்பட்டது. எச்எம்எஸ் காலனியில் இருந்து திரும்பும் வாகனங்கள் டோக் நகர்  வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில் நிதிப்பற்றாக்குறை கார ணமாக  பணி தாமதமாகி வருகிறது.  போது மான நிதிகள் ஒதுக்கப்பட்டால் பணிகள் முழு வீச்சில் விரைவில் நடைபெறும்.  குறிப்பாக  முடக்குச்சாலை அருகே தேனி சாலைக்கு வாகனத்தை திருப்புவதில் வாகன ஓட்டி கள் சிரமப்படுகின்றனர் சமீபத்தில் மதுரை  ஆட்சியர் எஸ்.அனீஷ்  சேகர் தலைமையில் நடைபெற்ற சாலைப்  பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், இந்தப் பகுதி யில் போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, எச்.எம்.எஸ்.காலனி, விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளுக்கு முடக்குசாலை வழியாகச் செல்லும் பேருந்து களை சம்மட்டிபுரம் பிரதான சாலை வழியாக இயக்க போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 சம்மட்டிபுரம் பிரதான சாலையில் சாதா ரண பேருந்துகளை இயக்குவது மிகவும்  கஷ்டம்.  அச்சம்பத்து பகுதி மக்களின் நலன்  கருதி பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து  மினி பேருந்துகள் இயக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.   இது குறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரு  வாரத்திற்குள் மினி பேருந்து இயக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கூறுகையில், “பணியை விரைவாக முடிக்க   பணியில் அதிகப் பணியாளர்களை ஈடுபடுத்த ஒப்பந்ததாரர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆறு மாதங்களுக்குள் பணிகளை முடித்து விட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்த என்.சங்கரபாண்டியன் (78) கூறுகை யில், ஒவ்வொரு நாளும் ஏராளமான வாக னங்கள் போக்குவரத்து விதிகளை கண்டு கொள்ளாமல் செல்கின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு நடந்து சென்ற பெண் ஒருவர்  கீழே விழுந்து ரத்தக் காயம் அடைந்தார். மற்றொரு நாள் நடைபெற்ற நிகழ்வில் தண்  ணீர் லாரி மின்கம்பத்தில் மோதியது. பாலம்  பணியை விரைந்து முடிக்கவேண்டுமென்றார்.