districts

img

மதுரைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்தி மக்கள் உற்சாக வரவேற்பு

மதுரை, ஜன.28-  ஒன்றிய பாஜக அரசு நிராகரித்த ‘‘விடுதலைப் போரில் தமிழகம்’’ தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் அரசின் அலங்கார ஊர்தி மதுரைக்கு வந்துள்ளது. இதற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் எல்லையான கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டியில் வெள்ளியன்று அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஸ்சேகர் முன்னிலையில் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் அருகில் ஜனவரி 28 முதல் ஜனவரி 31 வரை நான்கு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தப்படவுள்ளது.