தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க வேண்டும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் காலம்தாழ்த்தி வரும் ஒன்றிய பாஜகஅரசைக் கண்டித்தும் கருப்புக்கொடி ஏற்றி திருவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார அதிபர் சந்தனசகாயம். உதவிப் பங்குத்தந்தை செல்வநாயகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.