districts

ஆவினில் ஒட்டுமொத்த ஊழலுக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம்

தேனி, டிச.29- தேனியில் உள்ள ஆவின் விற் பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பால் குளிரூட்டும் நிலை யங்களில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் டிசம்பர் 29 அன்று ஆய்வு மேற் கொண்டார்.  உழவர் சந்தை அருகே உள்ள ஆவின் விற்பனை நிலையம், பெரியகுளம்சாலை மற்றும் மதுரைசாலை சாலையில் உள்ள ஆவின் விற்பனை நிலையங் களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது விற்பனை நிலையத் திற்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு ஆவின் பொருட் களை விற்பனை செய்தார். பின் னர் சிட்கோ தொழிற்பேட்டையில்  உள்ள ஆவின் குளிரூட்டும் நிலை யத்திற்கு நேரடியாக சென்று பாலின் தன்மை குறித்தும் ஆய்வு கள் மேற்கொண்டார்.  பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமி ழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி யில் நடைபெற்ற ஊழல் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அத னடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வரு கின்றோம்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளது. ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் நடந்துள்ளது என்று தெரிவித் தார். ஆய்வின் போது திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கம்பம் ராம கிருஷ்ணன், ஆண்டிபட்டி மகா ராஜன், பெரியகுளம் சரவணக் குமார் உட்பட துறை சார்ந்த அதி காரிகள் பலர் கலந்து கொண்டனர்.