districts

img

திருச்சுழி பகுதியில் அடிப்படை வசதி கோரி சிபிஎம் போராட்டம்

திருச்சுழி, ஜூலை 28- திருச்சுழி ஒன்றியம், கீழக்கண்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது கோணப்பநேந்தல் மற்றும் சித்தலக்  குண்டு கிராமம் உள்ளது. இங்கு கண்  மாய் உள்ளது. இக்கண்மாய்க்குள் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 4 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தனியார் ஆலைக் கழிவு நீர் கண்மாய்க்குள் விடப்படுகிறது. இதனால், கண்மாயில் உள்ளநிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. எனவே, கழிவு நீர் வருவதை தடுத்து  நிறுத்த வேண்டும். கோணப்பநேந்தல், சித்தலக்குண்டு ஆகிய கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, மயானப்  பாதை ஆகிய அடிப்படை வசதிகளை  செய்து தர வேண்டும். தும்முசின்னம் பட்டி, தொப்புலாக்கரை கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு சுத்திக ரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சுழி ஒன்றிய அலுவலகம்  முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு இராஜேந்திரன், சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையேற்றனர். துவக்கி வைத்து ஒன்றிய செயலாளர் மார்கண்டேயன் பேசினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ.செல்வராஜ், ஆர்.பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில் மாவட்ட செயற்குழு  உறப்பினர் வி.முருகன் கண்டன உரை யாற்றினார். இதில் ஏராமானோர் பங் கேற்றனர்.