மதுரை, மார்ச் 19- வங்கதேசத்தில் நடைபெற வுள்ள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி யுள்ள மதுரையைச் சேர்ந்த சி. சிவக்குமாருக்கு மாவட்ட ஆட்சி யர் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கி பாராட்டினார். மதுரை அனுப்பானடி பகுதி யைச் சேர்ந்த சச்சின் சிவி (எ) சி.சிவக்குமார் வங்கதேசத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கள் கிரிக்கெட் போட்டிக்கு தேர் வாகி உள்ளார். வங்கதேசத்திற்கு செல்ல பயணச்செலவு, விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வ தற்காகவும் நிதியுதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், வெள்ளி யன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி யர் மரு.எஸ்.அனீஷ்சேகர், தன் விருப்புரிமை நிதியிலிருந்து சி. சிவக்குமாருக்கு நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோ லையை வழங்கினார். மேலும் சிவக்குமார் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.