இராமநாதபுரம், செப்.3- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்-விவசாயி கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மதுரை புறநகர் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமங்கள் தோறும் பிரச்சா ரம் செய்து வருகிறது. செப்.7-ஆம் தேதி நடைபெறும் மறியலில் விவ சாயிகள், தொழிலாளர்கள், விவசா யத் தொழிலாளர்களை திரட்டும் பணியிலும் கட்சி ஈடுபட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் முழு வதும் வேன் பிரச்சாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரு கிறது இதனொரு பகுதியாக, மதுரை மேற்கு ஒன்றியக்குழு ஞாயி றன்று கோவில் பாப்பகுடி, சிக்கந் தர்சாவடி, பாசிங்காபுரம், பூதகுடி, குலமங்களம், வீரபாண்டி, ஊமெச்சிகுளம் காஞ்சரம்பேட்டை, மஞ்சம்பட்டி, சத்திரபட்டியில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டது. கோவில்பாப்பகுடியில் பிரச்சா ரத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரிய ருமான எஸ்.பி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பிரச்சாரம் நடை பெற்ற ஊர்களில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம், எஸ்.பாலகிருஷ்ணன், பாண்டி, கே.முருகேசன், லெனின் இரவீந்தி ரன், எஸ்.சரவஸ்தி, அமிர்தவள்ளி, சிஎஸ்.ஜெகநாதன், செ.ஆஞ்சி ஆகியோர் பேசினர். மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கட்சியின் சார்பில் மக் கள் சந்திப்பு இயக்கம் நடைபெற் றது. இதில் ஒன்றிய அரசின் வஞ்சக நடவடிக்கைகளைக் கண்டித்து அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு செப்.7-ஆம் தேதி ரயில் மறியலில் அனைவரும் பங்கேற்பில் என அழைப்பு விடுக் கப்பட்டது. இதனொரு பகுதியாக மாநகர் மாவட்டச் செயலாளர் செய லாளர் மா.கணேசன் தலைமையில் நடைபெற்ற துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் பாத்திமாநகரில் துவங்கிய பிரச்சாரம் தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. பிரச்சாரத்தில் நகர் செயலாளர் எல்.முருகன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், என்.உமாமகேஸ் வரி, எம்.ஜெயபாரத் உட்பட பலர் பங்கேற்றனர். திருத்தங்கல்லில் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் பி.என்.தேவா உட்பட பலர் பங்கேற்றனர். காரியாபட்டி முதல் மல்லாங்கி ணறு வரை வட்டச் செயலாளர் ஏ. அம்மாசி தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் ஒன்றி யச் செயலாளர் எம்.கணேசன் தலை மையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி
தேனியில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் சி.முருகன், விவசாயத் தொழி லாளர்கள் தாலுகா செயலாளர் இ.தர்மர், டி.நாகராஜ் ,டி.ஜெய பாண்டி, பொன்னுத்துரை ,காமுத் துரை, அப்பாஸ் மந்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் ஏரியா முழு வதும் மறியலை விளக்கி நடை பெற்ற பிரச்சாரத்தில் மூத்த தலை வர் கே.ராஜப்பன் மாவட்ட குழு உறுப்பினர் சி.மு.இப்ராஹிம், ஏரியா குழுச் செயலாளர் (பொறுப்பு) எஸ். லட்சுமணன், டி.கே சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர் போடி வட்டாரத்தில் தர்மத்துப் பட்டி, ரெங்கநாதபுரம், சில்லமரத் துப்பட்டி, சிலமலை பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வ ரன், விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், தாலுகா செய லாளர் எஸ்.செல்வம், பி.சந்திர சேகர், காமராஜ் ,செல்லப்பாண்டி, அதிகாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இராமேஸ்வரம்
இராமேஸ்வரம், தங்கச்சி மடத்தில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் மாவட்டச் செயலாளர் வி காசிநாததுரை, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா, ஆரோக் கிய நிர்மலா, ஜஸ்டின், ஏ.அசோக், ஜேம்ஸ் ஜஸ்டின், மாரிமுத்து உள் ளிட்டோர் பங்கேற்றனர்.