மதுரை, அக்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தோழர் எஸ். மீனாம்பாள் (வயது 90) காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு முன்னாள் தாகூர் நகர் கண்மாய் கரை கிளையின் செயலாளரும் செல்லூர் வட்டா ரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் திறம்பட செயலாற்றியவர் ஆவார். அவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஆர். சசிகலா, பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச் சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. ராதா, மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை. ஜென்னியம்மாள், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஒய்வூதியர் கிளை செயலாளர் சிவதாணு மலையான், முன்னாள் மாமன்ற உறுப்பி னர்கள் க. திலகர், பா. பழனியம்மாள், பகுதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர் மீனாம்பாள் அவர்களின் மருமகன் கருப்பையா கட்சிக்கிளை முன்னாள் செயலாளர் ஆவார். மகள் கல்யாணி கட்சி உறுப்பினராக உள்ளார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி தத்தனேரி மயானத்தில் நடைபெற்றது.