districts

img

சிபிஎம் மூத்த தோழர் என்.கெர்சோம் காலமானார்

மதுரை, மார்ச் 19-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் என்.கெர்சோம்  (வயது 83) அவர்கள் மார்ச் 19  ஞாயிறன்று காலமானார்.  அன்னாரது இறுதி நிகழ்ச்சி  திங்களன்று மதியம் 12 மணிக்கு  மேல் 2/71 ரயிலார்நகர், டிஎன்எச்பி காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து நடைபெறுகிறது. மதுரை ரயிலார் நகரைச் சேர்ந்தவர் தோழர் கெர்சோம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது உறுதியான பற்றுக் கொண்ட இவர், தீக்கதிர் அலுவலகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர் ஆவார். தீக்கதிரின் துவக்க காலகட்டத்தி லிருந்து பணியாற்றிய தோழர்களில் ஒருவர். கட்சியின்  மறைந்த மகத்தான தலைவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், ஏ.நல்லசிவன், ஏ.அப்துல்வகாப், என்.வரதராஜன் ஆகியோருக்கு உதவியாளராக, அவர்களது அன்பை பெற்ற தோழராக செயல்பட்டவர் தோழர் கெர்சோம். சமீப இரண்டு வார காலமாக உடல்  நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி கால மானார். தீக்கதிர் மீதும், கட்சி மீதும் அளவற்ற நேசம் கொண்ட வர். தனது குடும்பத்தையும் அவ்வாறே வளர்த்தெடுத்தார். தோழர் கெர்சோமின் மகன்கள் தீக்கதிர் அலுவலகத்தில்  பணியாற்றுகின்றனர். கெ.கென்னடி தீக்கதிர் அச்சகப்பிரி விலும் கெ.பாண்டியராஜன் தீக்கதிர் அச்சகப்பிரிவு மற்றும் வைகை பிரிண்டர்ஸ் மேலாளராகவும் பணி யாற்றுகின்றனர். அவரது மறைவு செய்தி அறிந்து தீக்கதிர் ஆசிரியர்  மதுக்கூர் இராமலிங்கம், கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், 23 ஆவது வார்டு  சிபிஎம் கவுன்சிலர் டி.குமரவேல், தீக்கதிர் பொறுப்பாசி ரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ. ராஜ்மோகன், விளம்பர பிரிவு பொறுப்பாளர் மு.சங்கர நயினார் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.