மதுரை, அக்.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகி 60-வது ஆண்டு துவக்கத்தையொட்டி அக்.31 செவ்வாயன்று மதுரையில் கட்சிக் கிளைகள் சார்பில் கொடியேற்றி யும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேற்கு - 1ஆம் பகுதிக்குழு சார்பில் பைக்காரா, பழங்காநத்தம் மற்றும் பெத்தானியபுரம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., துணை மேயர் தி.நாகராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், பகுதிக் குழு செயலாளர் கு. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பெத்தானியாபுரம் லுமூம்பா படிப்பகத்தில் அமைக்கப்பட்டி ருந்த கட்சியின் வரலாற்று கண் காட்சியை சு.வெங்கடேசன் எம்.பி. திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கொடி யேற்றினார். கிளைச் செயலாளர் டி.ஜான் மைக்கேல் தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் சி.சீனி வாசன், கு.மாரிகண்ணு உள்ளிட் டோர் பங்கேற்றனர். பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் என்.கண்ணன் தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப்பினர் மார்நாடு முன்னிலை வகித்தார். தனசேகர் நன்றி கூறி னார். மூத்த தோழர் வி.கே.பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், “மதுரை மாநகரில் உள்ள அனைத்து கட்சி கிளைகளும் 60-வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி யை கொண்டாடிக் கொண்டி ருக்கின்றன.
ஏழை, எளிய மக்க ளுக்காகவும், உழைப்பாளி மக்க ளுக்காகவும் என அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை பிரச்ச னைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதே நேரத்தில் முதலாளித்துவ கட்சிகள் பல்லா யிரம் கோடிகளை செலவு செய்து தங்களது இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதானியுடைய சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் ரூ.1200 கோடி உயர்ந்துள்ளது. இது குறித்து கேள்வி கேட்கக்கூடிய கட்சியென்றால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மட்டுமே. தற்போதும் கூட ரூ.1200 கோடி மதிப்புள்ள மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பின ராக சிபிஎம் இருக்கும் ஒரே கார ணத்தால் கடந்த எட்டு மாதங்களாக அந்த முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டு பாதுகாத்துக் கொண்டிருக் கின்றோம். கட்சி இன்னும் தொடர்ந்து அதற்காக போராடும். மதுரையில் மாடக்குளம், பழங்காநத்தம் என்று பல பகுதி களில் உள்ள தோழர்கள் எண் ணற்ற தியாகங்களை செய்து கட்சி யை முன்னெடுத்துச் சென்றுள்ளார் கள். அவர்களை இந்த நேரத்தில் போற்றுவோம். நியாயத்திற்கு குரல் கொடுக்கும் அரசியலை உயிரோட்டமாக வைத்திருப்பது இந்த செங்கொடி இயக்கம் தான். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரியுங்கள்; கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்யுங்கள் என்று பேசினார்.