districts

img

அறந்தாங்கி பேருந்து நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

அறந்தாங்கி, மே 6-  அறந்தாங்கி பேருந்து நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக் கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கிக்கு சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக் காக தினசரி வந்து செல்கின் றனர்.  இந்நிலையில், அறந் தாங்கி பேருந்து நிலையத்தி லிருந்து அண்ணா சிலை  செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு ஒரு பேருந்து மட்டுமே செல்லக் கூடிய வகையில் சாலை உள்ளதால் வாகன ஓட்டி கள், பொதுமக்கள் மிகுந்த  சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.  இதேபோல், பெரியார் சிலை அருகில், ஆவுடையார் கோவில் சாலை திரும்பும் வழியில் ஓடும் கழிவுநீர் வாய்க்கால் தடுப்பு சுவர் இன்றி இருப்பதால், பேருந் துகள் வேகமாக வரும் போது, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கழிவு நீர் வாய்க்காலில் விழும் நிலை  உள்ளது.  எனவே, அறந்தாங்கி  பேருந்து நிலையத்தி லிருந்து அண்ணா சாலை செல்லும் தார்ச்சாலையை இருபுறமும் சீரமைக்க  வேண்டும். குண்டும்குழியு மாக உள்ள பள்ளங்களை சீர மைக்க வேண்டும். கழிவு நீர்  வாய்க்கால் ஓரத்தில் தடுப்புச்  சுவர் அமைக்க வேண்டும்  என நகராட்சி நிர்வாகத் திற்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் கோரிக்கை விடுத்துள்ளார்.