districts

img

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: நிவாரணம் கோரி சிபிஎம் போராட்டம்

சிவகாசி அருகே உள்ளது நடுவப்பட்டி. இங்கு மாரி முத்து என்பவர் வீட்டில் கட்டுமானப் பணிகள் நடை பெற்றது. அப்போது, கட்டிடம் கட்டும் இடத்தின் அருகே, மின்கம்பி சென்றுள்ளது. இந்நிலையில், கான்ங்கிரீட் மிஷின் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் மாரிமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர்  காயமடைந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்த இருவருக்கு உரிய நிவார ணம் வழங்க வேண்டும். நடுவப்பட்டியில் 15 இடங்களில் தாழ்வாக செல்லும் மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில்,  ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கு வது. அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வது. மேலும், முதலமைச்சர் நிவாரணம் நிதி மூலம் ரூ.3 லட்சம் வழங்குவது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைப்பது என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.   போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் தலை மையேற்றார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.என்.தேவா, கே.முருகன், நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.