அருமனை, ஜூன் 26- ஒன்றிய அரசின் இளைஞர் விரோத சட்டமான அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெறக் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி யின் மேல்புறம் வட்டாரக்குழு சார்பில் மேல்புறம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார செயலாளர் ஆர்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்சியில் மாநில குழு உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், மாவட்ட குழு உறுப்பினர் பி. சிங்காரன்,பாகோடு கூட்டுறவு சங்க தலைவர் வின்சென்ட், அண்டுகோடு கூட்டுறவு சங்க தலை வர் அனூப்,மருதங்கோடு ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர். தக்கலை கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக் காடு சந்திப்பில் ஒன்றிய அரசின் நாச கார திட்டமான அக்கினி பாதை திட்டத் துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தக்கலை வட்டார குழு சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்நிகழ்வில் வட்டார குழு உறுப்பி னர் ஜான் இம்மானுவேல் தலைமை வகித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திர கலா, கட்சியின் வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், வட்டாரக் குழு உறுப்பி னர்கள், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.