நாகர்கோவில், நவ.30- நாடு முழுவதும் மின் வாரி யத்தை தனியார்மயமாக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் மின் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் பெரி தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத் தை அமல்படுத்தாமல் முழுமையாக நிராகரித்திட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜாக்கமங்க லம் ஒன்றியக்குழு சார்பில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று தெங்கம் புதூர் மின்வாரியம் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்திடும் வகை யில் மனு கொடுத்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஜெப மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராஜ் குமார், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் சிவகோபன், மிக்கேல் நாயகி, கோபாலன், குமரேசன் ஆகியோர் விளக்கி பேசினர். இதில் 300 மனுக்கள் கொடுக்கப் பட்டன.