திண்டுக்கல், ஜன.31- பழனி வட்டம் கே.வேலூர், பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.வேலூர் பகுதியில் பட்டி யல் சாதியினர் குடியிருப்புப் பகு தியில் உள்ள ஆக்கிரமிப்பை தடுத்து நில அளவீடு செய்து கல் நட வேண்டும். குடியிருக்கும் வீடு களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். வேலம் பட்டி கிராமம், கீரனூர், தொப்பம் பட்டி பகுதியில் உள்ள நிலங்க ளில் வழங்கப்பட்ட பட்டாக்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் வி.ராஜமாணிக்கம், எம். ராமசாமி, தொப்பம்பட்டி ஒன்றி யச் செயலாளர் கனகு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பழ னிச்சாமி, இஸ்மாயில், இளைய பாரதி, முருகேஷ், சக்திவேல் மற்றும் கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.