மதுரை, மார்ச் 2- மதுரை மாநகராட்சி 100 ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளானந்தபுரம், சந்தோஷ் நகர், ஜே.ஜே.நகர், ஆகிய பகுதி களில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். புதியதாக தெருவிளக்கு, புதியதாக மின் கம்பங்கள் அமைக்க வேண் டும். சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவனியா புரம் பகுதிக்குழு ஜானகி அம்மாள் கிளையின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவனியாபுரம் மந்தைத் திடலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஆர்.பசும்பொன் தலைமை வகித்தார். கே.சுப்பிர மணி (மினிமாஸ்) முன்னிலை வகித்தார். அவனியாபுரம் தாலுகா செயலாளர் ஏ. தன பாலன், எம். சேதுராமன் , கே. மாரி(எல்.ஐ.சி) ஆகியோர் பேசி னர் .மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். பி.இளங் கோவன் நிறைவுரையாற்றி னார். கிளைச்செயலாளர் இ. ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். 100வது வார்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.