districts

img

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி. ஜூன் 29- சிறுபான்மை மக்கள் மீதான தாக்குத லை கண்டித்தும், ஒன்றிய பிஜேபி அரசு- சங்பரிவார கும்பல்களின் மத துவே ஷங்களுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மேலப்பாளை யத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ய குழு உறுப்பினர் பி சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.நூர் முகமது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்டச் செய லாளர் ஆர் செல்லசாமி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி ஆறுமுகம், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி  கற்பகம், பூமயில், நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம்.சுடலைராஜ் , எஸ்.பெருமாள், துரைராஜ், பீர் முகம்மது ஷா, ஆர்.எஸ்.செண்பகம்,  சி.பி.எம் முன்னாள் நெல்லை மாவட்டச் செய லாளர் வீ.பழனி,மாவட்ட குழு உறுப்பினர்கள் கு.பழனி,ஜோதி,கந்தசாமி,பி.எம்.முருகன், ஆர்.முருகன் ,மாமன்ற உறுப்பினர் முத்து சுப்ரமணியன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் குழந்தைவேலு  உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;