districts

img

எருமலைநாயக்கன்பட்டியில் ரேசன்கடை முறைகேட்டை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி ,ஜூன் 9- பெரியகுளம் அருகே  எருமலைநாயக் கன்பட்டியில்  ரேசன் கடை முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கூட்டுறவு சொசைட்டிக்கு எதிரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை  முறையாக கட்டி மக்கள் பயன்பாட்டி ற்கு திறக்க வேண்டும் .பால் உற்பத்தியாள ருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள லிட்ட ருக்கு ரூ.35  வழங்க வேண்டும் .நீதிமன்ற  உத்தரவின் அடிப்படையில் முத்துப் பிள்ளை  கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கூடுதல் தண்ணீர் தேக்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு   பெரியகுளம் தாலு காக்குழு உறுப்பினர் காளிச்சாமி  தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வீராச்சாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர் . கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி  உரையாற்றினார். தாலுகா செயலாளர் எம்.வி.முருகன். மாவட்டக்குழு உறுப்பினர் பி.இளங்கோவன், பிரேம்குமார். தாலுகாக் குழு உறுப்பினர் ஆர் .கே . ராமர், மன்னர் மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;