மதுரை, மார்ச் 15- பல ஆண்டுகளாக மக்க ளின் பயன்பாட்டில் இருந்த ரயில்வே காலனி பாதையை திறக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில்வே கோட்ட மேலாளரி டம் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மதுரை மாநகர் மத்திய - 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அ.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பாண்டி, பகுதிக்குழு உறுப்பினர் சின்னபாண்டி ஆகியோர் ரயில்வே கோட்ட மேலாளரி டம் நேரில் மனு அளித்தனர். அந்த மனுவில், மதுரை ரயில்வே காலனி பகுதி வழியே நீண்ட காலமாக கரி மேடு பகுதி மக்களும் , மக பூப்பாளையம் , எல்லீஸ் நகர் மக்களும் சென்று வந்தனர். இது மக்கள் போக்குவரத் துக்கு பெரும் உதவியாக இருந்தது. கொரோனா ஊர டங்கு காலத்தில் மக்கள் பாதுகாப்பு கருதி ரயில்வே நிர்வாகம் இப்பாதையினை மூடியது. ஊரடங்கு தளர்வு கள் வந்த பின்னும் இப்பாதை யை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பாதையினை அடைக்கும் போது ரயில்வே கோட்ட நிர்வாகம் இவை தற் காலிகமானது என்று தெரி வித்தது. ஆனால் இன்னும் இப்பாதை திறக்கப்படாமல் உள்ளது. எனவே நீண்ட நெடிய காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பாதையை திறக்க ரயில்வே கோட்ட மேலாளர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.