மதுரை, ஜூலை 6- மதுரை துணைமேயர் மீது அவதுாறு பரப்பும் நபர்கள் மற்றும் ஊடகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 6 அன்று காவல் துறை ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில் குமார் மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழு வைச் சேர்ந்த டி. நாகராஜன் ஜெய்ஹிந்த்புரம் 80 - வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப் பட்டு, பின்பு மதுரை மாநகராட்சி துணைமேயராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றி வருகிறார், கடந்த 4.9.2015 ஆம் தேதியன்று நாகராஜன் தன் பெயரிலும், தன் மனைவி செல்வராணி பெயரிலும் மதுரை டவுன் , மாடக்குளம் கிராமம், வீரகாளியம்மன்கோவில்தெரு, சர்வேஎண் : 80/5 ல் கட்டுப்பட்ட 650 ச.அடி காலிமனையை பத்திர எண் : 8770/2015 ஆக மதுரை எண்: 4 சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரைய பத்தி ரம் மூலம், கிரையம் பெற்று மேற்படி சொத்தினை அனுபவித்து வருகி றார்கள். இந்நிலையில், மேற்படி காலிமனையானது தவறுதலாக மதுரை மாநகராட்சி ஆணையா ளர் பெயரில் வருவாய்துறை ஆவ ணங்களில் பதியப்பட்டிருப்பதாக பின்பு தெரியவந்து, சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அத்தவறு தலை சரிசெய்யகோரி நாகராஜன் மனு கொடுத்து, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர், மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகி யோர்களின் விசாரணைக்கு பின்பு, மேற்படி தவறானது சரிசெய்யப் பட்டு, சம்பந்தப்பட்ட வருவாய் ஆவ ணங்களிலும் மற்றும் மதுரை மாநக ராட்சி சர்வே ஆவணங்களிலும் சரி செய்யப்பட்டு, நாகராஜன் மற்றும் மனைவி செல்வராணி பெயரிலும் கடந்த 14.6.2021ம் தேதியன்று அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் அழகுதேவர் மகன் சகாதேவன், நாகராஜன் இடத்திற்கு எதிர்புறம் வீடுகட்டியுள்ளவர். மதுரை மாநகராட்சிக்கு சொந்த மான இடத்தை துணை நாகராஜன் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவ்வப்போது மொட்டை பெட்டி சன் போட்டு அலைக்கழித்து வந் துள்ளார் . அதன் உச்சக்கட்டமாக கடந்த 10.8.2020 ஆம் தேதியன்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நாக ராஜனை அவதூறு செய்யும் வித மாக மேற்படி சகாதேவனும், சகா தேவன் நண்பர் மாயக்கண்ணனும், சுவரொட்டிகளை ஒட்டி , அதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நாகராஜன் மேற்படி இருநபர்கள் மீதும் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 31.5.2022 ஆம் தேதியன்று, மேற்படி சகாதேவன் பொது மக்கள் குறை தீர்க்கும் நாளில், மதுரை மாநக ராட்சி மேயரிடம் மேற்படி இடம் சம் பந்தப்பட்ட தவறுகள் சரிசெய்யப் பட்டுவிட்டது என்ற விபரம் நன்கு தெரிந்திருந்தும், மீண்டும் நாக ராஜனை அவதூறு பரப்ப வேண் டும் என்ற எண்ணத்தில், நாகராஜன் மதுரை மாநகராட்சி இடத்தை ஆக் கிரமிப்பு செய்துள்ளதாக, நாக ராஜன் செய்துவரும் மக்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மதுரை மாநக ராட்சி அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள் மத்தியில் அவப்பெயரை உரு வாக்க வேண்டும் என்ற நோக்கத் தில், ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளார். பின்பு நாகராஜன் விளக்கம் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் மேற்படி புகார் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 4.7.2022 ஆம் தேதியன்று மேற்படி சகா தேவன் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலத்தில் இருக்கும் செய்தி யாளர்களை சந்தித்து, அங்குள்ள செய்தியாளர்களிடம் துணை மேயர் நாகராஜனை அவதூறு பரப்பும் விதமாக, மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து இருப்ப தாகவும், அது சம்பந்தமாக தான் புகார் கொடுத்துள்ளதாகவும், மேலும், தற்போது தான் கட்டியுள்ள வீட்டிற்கு குழாய் போடுவதற்கு மதுரை மாநகராட்சி உத்தரவு வாங்கி உள்ளதாகவும், அதனை நாக ராஜன் தடுப்பதாகவும் , தனது பத வியை துஷ்பிரயோகம் செய்வதாக வும் , துணை மேயர் நாகராஜன் மீது அவதூறு செய்யும் விதத்தில் செய்திகளை பரப்பி வருகிறார். உண்மையில், மேற்படி சகாதேவன் என்பவர் தான் தனது வீட்டிற்கு குழாய் போடுவதற்கு, மதுரை மாந கராட்சியில் மனு கொடுத்தது பற் றியோ அல்லது உத்தரவு வாங்கி யது பற்றியோ துணை மேயர் நாக ராஜனுக்கு எதுவும் தெரியாது. மேலும், குழாய் போடுவது சம்பந் தப்பட்ட வேலைகளுக்கும் நாக ராஜனுக்கும் எவ்வித சம்பந்தமும் தொடர்பும் கிடையாது . உண்மை நிகழ்வு இவ்வாறு இருக்க, மேற் படி சகாதேவன் கொடுத்த பொய் யான, விஷமத்தனமான செய்தி யை, துணை மேயர் நாகராஜனுக் கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்று தீய எண்ணத்தில் பரப்ப வேண்டும் என்ற உட்கருத் தில் மேற்படி பொய்யான செய்தி யை, தொலைக்காட்சி விதிமுறை களுக்கு முரணாக, சம்பந்தப்பட்ட நாகராஜனிடமோ அல்லது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப் பாளர்களிடமோ மேற்படி புகார் சம் பந்தமாக எவ்வித கருத்து கேட்கா மல், அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்திகளை பரப்பி வரும், “நம்ம அம்மா” டிவி சேனல் ஒளிப் பரப்பியும், அந்த டிவியின் சமூக வலைதளத்திலும் பரப்பப்பட்டும் வருகிறது. மேற்படி பொய்யான அவதூறு செய்தியை பார்க்கும் மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களும் , மிகுந்த மன ஊளைச்சலுக்கும், மனவேதனைக் கும் ஆளாகியுள்ளார்கள்.
மேலும், மதுரை மாநகராட்சி யில் விசாரிக்கும் போது , மேற்படி சகாதேவன் என்பவர் வீட்டில் குழாய் வேலை ஏதும் நிலுவையில் இல்லை என்றும் தெரியவருகிறது . எனவே காவல்துறை ஆணையாளர் இது சம்பந்தமாக மேற்படி சகா தேவனை உடனடியாக விசாரித்து, ஏற்கனவே நாகராஜன், நீதிமன்றத் தில் தனக்கு எதிராக அவதுாறு வழக்கு போட்டு, விசாரணையில் இருந்து வரும் முன்விரோதத்தின் காரணமாகவும், மக்கள் நலனுக் காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பான துணை மேயர் நாகராஜனுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தி லும், எங்கள் கட்சிக்கு விரோத மான நபர்களின் தூண்டுதலின் பேரில், தொடர்ந்து அவதூறு பரப்பிவருவதை தடுத்து நிறுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், மேலும் , சமூகவலைதளத்தில் மேற்படி பொய்யான அவதூறான செய்திகளை பரப்பி வருகிற “நம்ம அம்மா டிவி” நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும், மேற்படி சமூகவலைதள அவ தூறு செய்திளை தடுத்து நிறுத்தி யும் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மனு அளிக்கும் போது, கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிரமணி யம், துணை மேயர் டி. நாகராஜன், வழக்கறிஞர் ராமசாமி மற்றும் இதர வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.