districts

img

அனைவருக்கும் வீடு வழங்க கோரி சிபிஎம் மனுக் கொடுக்கும் போராட்டம்

திருச்சுழி, டிச.21- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் வாடகை வீடு, சேத மடைந்த வீடுகள், குடிசை வீடு, ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடு களில் குடியிருப்போரை முறையாக கணக்கீடு செய்து  அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள்  வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. எம்.ரெட்டியபட்டியில்  நடைபெற்ற இப்போராட்டத் திற்கு வட்ட செயலாளர் மார்கண்டேயன் தலைமை தாங்கி னார்.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன் சிறப்பு ரையாற்றினார். மேலும் இதில், ரமேஷ்பாபு, வரதராஜன், பூரணம், லிங்கம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பின்பு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு  வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் பங்  கேற்றனர்.