மதுரை, ஏப்.3- வரி வருவாயை அதிகரிக்கவும் மாநக ராட்சிக்குச் சொந்தமான இடங்களை மீட்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவா தத்தில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஜென்னி யம்மாள் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சி 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளி யன்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் ஏப்ரல் 3 திங்களன்று நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பங்கேற்ற 10 க்கும் மேற்பட்ட திமுக கவுன் சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக கூட்ட அரங்கினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாமன்றக்குழு தலைவராக 58 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.ஜெய ராமன் கடந்த 2022 டிசம்பர் 29 அன்று நிய மிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. குழு தலைவருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். மாமன்ற கூட்ட தீர்மா னங்கள் குறித்து விவாதிப்பதற்கான அறை, மற்ற மாநகராட்சிகளில் குழு தலைவர் களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன்வைக்கப்பட்டி ருந்த கோரிக்கைகள் குறித்து, கடந்த ஜனவரி 23 அன்று பதிலளித்த மேயர் இந்திராணி, “கட்சி வழங்கிய சிறப்பு நிலை பொறுப்பு குறித்த சான்றிதழை சமிர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். திமுகவின் அதி காரப்பூர்வ நாளேடான முரசொலியில் இந்த நியமனம் தொடர்பாக வெளியான அறி விப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழு தலைவர் எம். ஜெயராமன் தலைமையில் திமுக கவுன் சிலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் சல சலப்பு ஏற்பட்டது. மேலும் மாமன்ற செய லாளர் தீர்மானம் வாசிக்க முயன்ற போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் சிலர் மைக்கை ஆஃப் செய்தனர்.
கோரிக்கை குறித்து மேயரு டன் பேசி முடிவு எடுக்கலாம் என கூறியதை அடுத்து போராட்டம் நிறைவடைந்தது. விவாதத்தை துவக்கி வைத்து 67 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகநாதன் பேசு கையில், பட்ஜெட்டில் நல்ல பல அம்சங் களை மதுரை மாநகராட்சி அறிவித்துள் ளது. அதற்கு நன்றி. பட்ஜெட்டில் விராட்டி பத்து ஆரம்ப சுகாதார மையத்தை மேம் படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. விரிவாக்கப்பகுதிகளில் தெரு விளக்குகள், எல்இடி விளக்குகள் பொருத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். அதுவும் விரிவாக்க பகுதிகளுக்கான நிதியில் இல்லை. தற்போது எச்எம்எஸ் காலனியில் இருந்து பி.பி.சாவடி வரை மேம்பால பணி கள் நடைபெற்று வருகிறது. இதனால் டோக் நகர் மற்றும் எச்எம்எஸ் காலனி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .டோக் நகர் பகுதியில் சாலை போடு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலை யில் எச்எம்எஸ் காலனி பகுதியில் சாலை போடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வா கம் ஏற்றுக்கொள்ளவில்லை .இதனால் சாலைகள் மிகவும் மோசமாகி வருகிறது. எச்எம்எஸ் காலனியில் சாலையை நெடுஞ் சாலைத்துறை அல்லது ஒப்பந்ததாரர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 56 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜென்னி யம்மாள் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்த பட்ஜெட்டில் ஒரு சில நிதி ஒதுக்கீடுகளை பாராட்டுகின்றது. குறிப்பாக மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக அதிக ரித்துள்ளதை பாராட்டுகின்றது. நலிவடைந்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று தமி ழக அரசு அறிவித்துள்ளது இது அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். கடந்த முறை மழை நீர் வடிகால் தூர் வாரு வதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை ஒதுக்கப்படவில்லை. மதுரையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வாய்க்கால்கள் அடைக் கப்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பழைய 72 வார்டுகளுக்கு 166 பூங்காக்கள் உள்ளன. இவற்றை சீரமைக்க பெரிய தனி யார் நிறுவனங்களிடம் வழங்கினால் அது சிறப்பாக இருக்கும். அதே போல் இலவச கழிப்பறை கட்டுவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். மாநகராட்சியில் வரி வருவாயை பெருக்குவதற்கு வழிவகை களை ஏற்படுத்தி இருக்கலாம் .உதார ணத்திற்கு ஒன்றிய அரசு நிறுவன குடியிருப்பு பகுதிகள், விளம்பர நிறுவனங்கள் விளம்பரம் வைப்பதற்கு, நெட்வொர்க் கம்பெனிகள் கேபிள் லைன் பதிப்பது போன்றவை களுக்கு வரிகளை போடலாம். வரி இனங்க ளுக்கான வழக்குகளை சீக்கிரம் முடித்து வரி வருவாய் வருவதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். மாநகராட்சிக்கு சொந்த மான இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். சட்ட ஆலோசகர்கள் இருந்தும் இதற்காக எந்த பயனும் இல்லாதது போல் உள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக தொகை வழங்க வேண்டும் அப் பொழுதுதான் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஊழியர்கள் பற்றாக்குறை அதி கம் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்து ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். பெரியார் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளையும் விரை வில் முடித்திட வேண்டும் என்று வலியுறுத்தி னார்.
செல்லூர் கண்மாய்க்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் பேசுகையில், 2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த வரவு செலவு திட்ட அறிக்கை. ஒரு ஆண்டில் நடந்த வேலை விப ரம் எதுவும் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வில்லை. 2023 - 24ஆம் ஆண்டிற்கான பட் ஜெட்டில் சாலைகள், பூங்காக்கள், பள்ளி கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு புள்ளி விவரம் இந்த அறிக் கையில் இல்லை. தமிழக அரசு மதுரை மாநக ராட்சிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ரூ.8,500 கோடி ஒதுக்கியுள்ளதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வர வேற்கின்றோம். இந்த நிதியாண்டில் சென்னை தமிழ்நாடு பவர் பைனான்ஸ் வழங்கியுள்ள ரூ. 3.64 கோடி நிதியை கொண்டு மதுரை மாநகராட்சி 9 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறையை கட்டுதல், கழிப்ப றைகள் கட்டுதல், மராமத்துப் பணிகள் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியில் எந்தளவிற்கு வேலை நடைபெற்றுள்ளது என்பது குறித்து அறிக்கையில் இல்லை. மதுரை மாநகரில் 100 வார்டுகளில் 19 லட்சம் மக்கள் தொகை, சுமார் 6 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றார்கள் அதற்கேற்ப பாதாள சாக்கடை வசதி ,பைப் லைன் மேனுவல் தொட்டி அமைக்க கூடுதலாக நிதி ஒதுக் கப்படவில்லை. அதேபோல் நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சி பள்ளிகளில் பயி லும் மாணவிகளுக்கான வாசிப்பு திறனை மேம்படுத்த 18 லட்சம் நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதில்லை. வண்டியூர் கண் மாயினை ஆழப்படுத்தும் பணிக்காக ரூ.50 கோடி மதிப்பீடு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. செல்லூர் கண்மாய்க்கு ஏன் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 71 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முனி யாண்டி (இன்குலாப்) பேசுகையில் , அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரையில் மிகவும் சிறிய குளங்களை மேம்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ராமன் குளம் என்ற ஊரணி உள்ளது .நான்கு ஏக்கர் பரப்பளவில் இந்த ஊரணி தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே இதனை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் . குப்பைகள் சேகரிப்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு உள்ளது. இது அருந்ததிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பய னுள்ளதாக இருக்காது. ஏனென்றால் அரசு அவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது என்றால், அது பாதுகாப்பான ஊதியமாக இருக்கும். இதை தனியாரிடம் இருந்து பெறு வதாக இருந்தால் அது பாதுகாப்பான ஊதி யமாக இருக்காது. எனவே இதை மாநக ராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்து தனியா ருக்கு விடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். அதிமுக சார்பில் பேசிய 64 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோலைராஜா, காங்கி ரஸ் சார்பில் 36-வது வார்டு மாமன்ற உறுப்பி னர் கார்த்திகேயன் ஆகியோரும் பேசினர்.