மதுரை, பிப். 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் போக்கு வரத்து இடைக்கமிட்டிகள் சார்பில் சிறப்பு பேரவை செவ்வாயன்று நடைபெற்றது.
பேரவைக்கு மாநகர் இடைக்கமிட்டி செய லாளர் எஸ். அழகர்சாமி தலைமை வகித்தார். புறநகர் செயலாளர் டி. மாரியப்பன் முன்னி லை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப் பினர் எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இரா. லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஏ. கனகசுந்தர், பி. எம். அழகர்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேரவையில் கட்சிக்கான நாடாளுமன்ற தேர்தல் நிதியாக 3 லட்சம் ரூபாய் போக்கு வரத்து இடைக்கமிட்டிகள் சார்பில் வழங்கப் பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.