அருமனை (நாகர்கோவில்), பிப்.12- கன்னியாகுமரி மாவட்டம் அரு மனை பேரூராட்சியை நிச்சயம் கைப் பற்றுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் உறுதியளித்துள்ள னர். அருமனை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் எட்டு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று இடங்க ளில் திமுகவும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மூன்று வார்டுகளில் போட்டியிடுகிறது. இங்கு போட்டி யிடும் பாஜக-வை முழுமையாக தோற்கடிக்க ஒரு வார்டில் தேமுதிகவும் போட்டியிடுகிறது. அருமனை பேரூராட்சியில் கடைசி பத்தாண்டுகள் பாஜக பொறுப் பிலிருந்தது. இரண்டு முறை வெற்றி பெற்ற பாஜக மக்களவை உறுப்பி னர் பொன்.இராதாகிருஷ்ணன் இருந்தும் இந்த பேரூராட்சி திட்ட மிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இரண்டு நிழற் குடைகளை மட்டும் மக்களவை உறுப்பினர் நிதியில் அமைத்துக் கொடுத்து தோல்வியை தழுவிச் சென்றுவிட்டார். பேருந்து நிலை யத்திற்கு பாஜக போட்ட முட்டுக் கட்டையால் அருமனை பேரூராட்சி யில் பேருந்து நிலையம் என்பது கானல் நீராக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முயற்சியால் 48 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பேருந்து நிலையப் பணிக்காக அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் ஜே.ஹேமச்சந்தி ரன் ரூ.25 லட்சம் நிதியும் ஒதுக்கி னார். ஆனால் பேருந்து நிலையத்தி ற்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக, மதவாதத்தை தூண்டி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றமோ சம்பந் தப்பட்ட நிலத்தை பொதுநோக் கத்திற்காக பயன்படுத்தலாம் எனக் கூறிவிட்டது. ஆனால், பாஜக கடைசி வரை பேருந்து நிலையம் கட்ட துரும் பைக்கூட கிள்ளிப்போட வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமயானம் இல்லை
தமிழகத்தில் ஒரு சிறு கிராமத்தில் கூட இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம், எரியூட்ட இடம் இருக்கும். ஆனால், அருமனை பேரூராட்சியில் அதற்கான எந்த முயற்சியையும் பாஜக செய்யவில்லை, யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எரி யூட்டுவதற்கு அருமனையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள குழித் துறை நகராட்சிக்கு வருகின்றனர். சிபிஎம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, பொது மயானம் அமைக்கப்படும் என வாக்காளர்க ளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானம்
குமரி மாவட்டத்தில் சாய் சப் சென்டர் அமைக்கவுள்ளதாக ஒன்றிய அமைச்சராக இருந்த பொன்.ராதா கிருஷ்ணன் மக்களுக்கு ஏமாற்றத் தையே தந்தார். அருமனையில் விளையாட்டு மைதானமே இல்லை என்ற நிலையை இங்கு அதிகாரத்தில் இருந்த பாஜக ஏற்படுத்தியது. அரசுக்கு சொந்தமான இடங்கள் இல்லாத பட்சத்தில் தனியார் நிலத் தை வாங்கி உடற்பயிற்சி நிலை யத்தோடு கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎம் சார்பில் தற் போது வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது.
குடிநீர் விநியோக இடைவெளியை குறைப்போம்
மக்கள் சந்திக்கும் பிரச்சனைக ளுக்கான தீர்வு குறித்து சிபிஎம் வட்டார செயலாளர் சி.சசிகுமார் கூறு கையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பேரூராட்சி பகுதிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக வழங்கு வது உறுதி செய்யப்படும். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீராதா ரங்கள் பாதுகாக்கப்படும். தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும். திற்பரப்பு வலது கரை சானலை சீரமைத்து பேரூராட்சிக்கு தண்ணீர் கொண்டுவர தனிக்கவனம் செலுத் தப்படும். தவிர அருமனை பேரூ ராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு களிலும் கவனம் செலுத்தி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்த வாக்குறுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேக ரித்து வருகின்றனர். அவர்களுக்கு அருமனை மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர் என்றார்.