நகர்கோவில். ஜன. 22- கன்னியாகுமரி மாவட்டம் குறுமத்தூரில் கூட்டுறவு வங்கி மோசடி மற்றும் பல்வேறு நாசகார வேலைகளில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட குறுமத்தூர் கூட்டுறவு வங்கி ஊழல், பண மோசடி, நிர்வாகச் சீர்கேடு மற்றும் தம்பிக்கை மோசடி, பணம் கையாடல் மற்றும் சொத்து சூறையாடல், சங்க செயலர் ராஜனின் பணியை முடக்கி, கையூட்டு பெற்று, தனக்கு வேண்டியவரை செயலாளராக பதவி உயர்வு செய்து, சங்க செயல்பாட்டை முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு நாசகார வேலைகளில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கிட்டங்கி கட்டிடம் மற்றும் காம்ப வுண்ட் கட்டுமானத்தில் சங்க தலைவரின் கொள்ளை மற்றும் சங்க பண இழப்பு குறித்து விசார ணை நடத்த வேண்டும் ,விவசாய கடன் மற்றும் விவசாய விளை பொருள் அடமானக் கடன் வழங்கியதில் முறைகேடு மற்றும் பினாமி லோன்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக் குழு உறுப்பினர் வின் சென்ட் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர் செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாத வன், பளுகல்—களியக்காவிளை வட்டாரச் செயலாளர் அனந்த சேகர், மார்த்தாண்டம் வட்டாரச் செயலாளர் மோகன் குமார், வட்டாரக் குழு உறுப்பினர் டி.வின்சென்ட், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.