districts

img

அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சிகளில் சொத்து வரி மீதான தீர்மானத்தில் சிபிஎம் கவுன்சிலர்கள் ஆட்சேபணை

விருதுநகர், ஏப்.11- விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிகளில் சொத்து வரி உயர்  வுக்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது ஆட்சேப ணையை பதிவு செய்தனர். கொரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இரு ஆண்டுகளாக அனைத்து தொழில் களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு இன்றி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். கடந்த ஜனவரி முதல் பொது முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது நிலைமை சீராகி வருகிறது.  இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசானது, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை கடுமை யாக உயர்த்தி வருகிறது. இந்தநிலை யில், தமிழக அரசானது, சொத்து  வரியை உயர்த்திட முடிவு செய்தி ருப்பது, மேலும் பொதுமக்களை சிர மத்திற்கு உள்ளாக்கும் என அருப் புக்கோட்டை நகர்மன்றக் கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் பாலசுப்பிரமணிய னும், விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஜெயக்குமாரும் தங்க ளது ஆட்சேபணைகளை பதிவு செய்த னர்.  மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பி னர் கே.விஜயகுமார்,

நகர் செயலாளர் பெத்தராஜ் ஆகியோர் சாத்தூர் நக ராட்சி தலைவர் குருசாமியிடம் சொத்து  வரி உயர்வை திரும்பப் பெற வேண்டு மென கோரிக்கை மனு அளித்தனர். விருதுநகர் நகராட்சி அலுவல கத்தில் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆணையாளர் சையது முஸ் தபா கமால், துணைத்தலைவர் தன லட்சுமி, பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வரு மாறு : கூட்டம் துவங்கியதும், சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மைக்கேல்ராஜ், சர வணன், அமமுக, கவுன்சிலர் ராமச் சந்திரன், சுயேட்சை முத்துலெட்சுமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். ஜெயக்குமார் (சிபிஎம் கவுன் சிலர்): காலிமனைக்கு 13 அரை யாண்டுகளுக்கான கட்டணம் வரியாக வசூலிக்கப்படுகிறது. இராஜபாளை யம், திருவில்லிபுத்தூர் நகராட்சிகளில்  குறைவாக வசூலிக்கப்படுகிறது. காலி மனைக்கு விருதுநகர் நகராட்சியில் தான் அதிகளவில் வரி வசூலிக்கப்படு கிறது. நகராட்சி தலைவர்: விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயக்குமார் (கவுன்சிலர்): வீடு கள் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதை ஆய்வு செய்து வரி வசூலிக்கும் முன் நெறிமுறைப்படுத்த வேண்டும். நகராட்சி தலைவர்: உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். கலையரசன், மதியழகன், ஜெயக்குமார் (கவுன்சிலர்கள்): கடை களுக்கான ஏலப் பொறுப்பு தொகை ரூ.1 லட்சம் என அறிவித்தால், எப்படி மக்கள் வருவர். நகராட்சி கடைகளை உள்வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும்.  நகராட்சி தலைவர்: ஏல பொறுப்பு தொகையை குறைப்பது குறித்து பரி சீலிக்கப்படும். உள்வாடகை விடுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும். நகராட்சி தலைவர்: தற்போது பெய்து வரும் கோடை மழையால் ஆங்காங்கே பாதாள சாக்கடை தொட்டியில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. ஆனால், இரு நாட்களாக நகராட்சி ஊழியர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இனி யும் இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நகராட்சி ஆணையாளர்: இனி உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும். ஜெயக்குமார் (கவுன்சிலர்): ஆனைக்குட்டம் தண்ணீர் உப்பு சுவை உடன் இருப்பதால் 24 வார்டுகளில் உள்ள மக்கள் உப்பு தண்ணீரை குடிக்கும் சூழல் உள்ளது. உப்பு நீருக் காக மாதம் ரூ.110 கட்டணம் செலுத்த வேண்டுமா? மொன்னி (கவுன்சிலர்): தாமிர பரணி குடிநீரை முழுமையாக கொடுத் தால் என்ன. ஆனைக்குட்டம் குடி நீரால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.  பொறியாளர்: படேல் சாலையில் உள்ள குழாய்கள் 1960-இல் போடப்  பட்டவை. இதனால் தான் தாமிர பரணி குடிநீரை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. கூடு தலாக பம்ப் செய்தால், குழாய்கள் உடைகின்றன. நகராட்சி தலைவர்: புதிய குழாய்களை பதித்து குடிநீர் பிரச்ச னைக்கு ஆலோசனை செய்து விரை வில் தீர்வு காணப்படும். இவ்வாறாக விவாதம் நடைபெற் றது.