பழனி, மார்ச்.4 பழனி நகர்மன்ற தலைவ ராக உமாமகேஸ்வரி மற்றும் துணைத்தலைவராக கே. கந்த சாமி ஆகியோர் பதவி ஏற்றனர். பழனி நகராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 23 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத தால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். உமாமகேஸ்வரி 2 ஆவது முறையாக பழனி மன்ற தலை வராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. 5வது வார்டில் வெற்றி பெற்ற சிபிஎம் கவுன்சிலர் கே. கந்தசாமி துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கந்தசாமியை துணைத் தலைவர் பதவிக்கு சாகுல் அமீது முன்மொழிந்தார். பத்மினி முருகானந்தம் வழிமொழிந்தார். மேலும் கந்தசாமியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 ஆவது முறையாக கவுன்சிலராக வெற்றி பெற்று,கே.கந்தசாமி துணைத் தலைவராக பொறுப்பேற்றுள் ளார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் வ.ராஜமாணிக்கம், திமுக சார்பாக தமிழ்மணி, பிரபாகரன், முருகானந்தம்,அழகேசன், சூசைராபர்ட் ஆகியோர் பங்கேற்றனர். (நநி)