districts

img

அய்யம்பாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

சின்னாளப்பட்டி, மார்ச் 17-  திண்டுக்கல் மாவட்டம் அய் யம்பாளையம் பேரூராட்சியின் முதல் கவுன்சிலர் கூட்டம் தலை வர் ரேகா ஐயப்பன் தலைமை யில் நடைபெற்றது.  இதற்கு துணைத் தலைவர் ஜீவானந்தம், செயல் அலுவலர் பாலசுப்ரமண்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தில், 12-ஆவது வார்டில் போட்டி யிட்டு வெற்றிப் பெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன் சிலர் பழநியம்மாள் பிச்சை மணி பேசும் போது, ஆத்தூர் காம ராஜர் நீர் தேக்கத்தில் இருந்து வரும் குடிதண்ணீரை சுத்தப் படுத்துவதற்கு சுத்திகரிப்பு நிலை யம் உள்ளது போல் அய்யம் பாளையம் மருதாநதி அணை யில் இருந்து வரும் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு சுத்திக ரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். பாழடைந்து கிடக்கும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டும். மருதாநதி அணை முதல் ஏகேஜி நகர் வரை சாலை சதி செய்து தர வேண்டும். தெரு விளக்குகள் மற்றும் பல அடிப்  படை வசதிகள் செய்து தர வேண் டும் என்று வலியுறுத்தினார்.