திண்டுக்கல், பிப்.7- திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 11வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் மாரி யம்மாள் திங்களன்று காமராஜர்புரம், மௌன்ஸ்புரம், லைன்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் நகர்க்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திமுக சார்பாக வார்டு செய லாளர் குருநாதன், கே.கணேசன், சங்கர், தாஸ், சிபிஎம் கிளைச் செயலாளர்கள் மாரி முத்து, முத்துகுமாரசாமி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் சாந்தி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆஸாத், ஜானகி, திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.