districts

img

சிபிஎம் - பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா

மதுரை, ஆக.16- 77 ஆவது சுதந்திர தின விழா வை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசியக் கொடியேற்றப்பட்டது. சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார் சிங்காரவேலர் நூலக பொறுப்பாளர் முருகேசன் தேசிய கொடியையும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். சசி கலா கட்சிக்கொடியையும் ஏற்றி  வைத்தனர். இதில மாநிலக்குழு  உறுப்பினர் இரா. விஜயராஜன் மற்  றும் பலர் பங்கேற்றனர். மேற்கு - 1ஆம் பகுதிக்குழு சார்  பில் சொக்கலிங்க நகர் பகுதியில்  மாவட்டச் செயலாளர் மா.கணே சன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அனைத்து பகுதிக்  குழுக்களிலும் தேசியக்கொடி யேற்றப்பட்டது.  மதுரை சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்  திர போராட்ட வீரர் வைத்தியநாத அய்யர் சிலை அருகில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மதுரை மாநகர் சார்பி லும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருமங்கலம் கட்சி அலுவல கத்தில் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து  உரையாற்றினார். 12 ஒன்றிங்களில் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றியச் செயலாளர்கள் மாவட்டச் செயற்  குழு மாவட்டக்குழு உறுப்பி னர்கள் தாலூகாச் செயலாளர்கள் ஆகியோர் தேசியக் கொடி மற்றும் கட்சி கொடி ஏற்றினர். தேனி

மதுரை புறநகர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருமங்கலம் கட்சி அலுவல கத்தில் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து  உரையாற்றினார். 12 ஒன்றிங்களில் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றியச் செயலாளர்கள் மாவட்டச் செயற்  குழு மாவட்டக்குழு உறுப்பி னர்கள் தாலூகாச் செயலாளர்கள் ஆகியோர் தேசியக் கொடி மற்றும் கட்சி கொடி ஏற்றினர்.

தேனி

தேனி விளையாட்டு மைதா னத்தில் நடந்த சுதந்திர தின விழா வில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா  தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.26 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  விழாவில், அரசின் பல்வேறு  துறைகளின் சார்பில் 56 பயனாளி களுக்கு ரூ.26 லட்சத்து 13 ஆயி ரத்து 59 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். சிறப்பாக பணியாற்றியதற் காக 205 பேருக்கு பாராட்டு சான்றி தழ்களை ஆட்சியர் வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெயபாரதி, பெரி யகுளம் சட்டமன்ற உறுப்பினர் சர வணக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, மாவட்ட ஊராட்சி தலை வர் பிரிதா, முதன்மை கல்வி அலு வலர் இந்திராணி மற்றும் அதிகாரி கள் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.

கிராம சபை

தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கம்பம் ஒன்றியம் கருநாகமுத்தன்பட்டியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கலந்து கொண்டார்.

கொடியேற்றிய  பெண் தூய்மை காவலர்

கம்பம் ஒன்றியம் குள்ளப்ப கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியர் சிவாஜி முன்னிலையில் பெண் தூய்மை காவலர் மாரி யம்மாள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சிபிஎம் அலுவலகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டக்குழு அலுவல கத்தில் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

சிபிஎம் திண்டுக்கல் மாவட் டக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

திருவில்லிபுத்தூர்

டால்பின் சமுதாய கல்லூரி வளாகத்தில் நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சுதந்திர தின கொடியை முருகதாசன் ஏற்றி வைத்தார்.  திருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயா பள்ளியில் கிரீன்சிட்டி யின் தலைவர் ஆனந்தக்குமார் கொடியேற்றினார். திருவில்லிபுத்தூர், கலச லிங்கம் பல்கலை துணைத் தலை வர் முனைவர் எஸ்.சசி ஆனந்த்  தலைமையில் நிகழ்ச்சி நடை பெற்றது. துணைவேந்தா் முனை வர் எஸ்.நாராயணன், தேசியக் கொடி ஏற்றினார். திருவில்லிபுத்தூரில் அமைந் துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி  திலகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

ஆத்தூர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மூத்த பேரா சிரியர் சௌந்தர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்  தார். சின்னாளப்பட்டி பேரூராட்சி யில் பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி  ஷோபனா ரவி, ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மகேஸ் வரி முருகேசன் ஆகியோர் தேசி யக்கொடியை ஏற்றினர்.