இராஜபாளையம், ஆக.24- இராஜபாளையம் நகராட்சி பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர்மன்ற தலைவர், நகராட்சி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இராஜபாளையம் நகராட்சியில் தாமிர பரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் தாமிரபரணி தண்ணீர் மிகவும் கலங்களாக வருவதாக பொதுமக் கள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக மலையடிப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் மிக மோசமான நிலையில் வந்தது. கடந்த சில நாட்களாக நகரின் இதர பகுதி களிலும் தண்ணீர் கலங்கலாக வர ஆரம் பித்துள்ளது. இந்நிலையில், நகர்மன்ற தலை வரிடமும், நகராட்சி பொறியாளரிடமும் சுகா தாரமான குடிநீர் மக்களுக்கு வழங்க கோரி கலங்களான தண்ணீருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், சுகாதா ரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக வும் நகர்மன்ற தலைவரும் நகராட்சி பொறி யாளரும் உறுதியளித்துள்ளனர். நிகழ்வில் சிபிஎம் நகரச் செயலாளர் மாரியப்பன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.