திண்டுக்கல், டிச.26- திண்டுக்கல் அருகேயுள்ள சாணார் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி.மந்தநாயக் கன்பட்டி பொது சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாணார் பட்டி ஒன்றியச்செயலாளர் வெள்ளைக்கண் ணன், பாப்பாத்தி, சரவணகோபால், மாயக் கண்ணன், விஜய், விஜயா, சக்திவேல் ஆகி யோர் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியரி டம் திங்களன்று மனு அளித்தனர். மனுவில், ‘‘டி.மந்தநாயக்கன்பட்டியில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரின் தெற்குப் பகுதியில் பொது மயானம் அமைந்துள்ளது. தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. தனியார் நிலங்களில் ஓரத்தில் தான் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்கின்றனர். தலித் மக்கள் மயானத்திற்கு செல்ல நிலங்களை ஆர்ஜிதம் செய்து பாதை அமைத்துத் தர வேண்டும்’’ எனக் குறிப் பிட்டுள்ளனர்.