இராமநாதபுரம், அக்.5- இராமநாதபுரம் மாவட்டம் சூரங் கோட்டை ஊராட்சி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அன்றாட கூலிகளாக ஏழ்மை நிலையில் உள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்த வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத விலைவாசி உயர்வால் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ள பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் இராமநாதபுரம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை, தாலுகா செயலாளர் பி. செல்வராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.குருவேல், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.வெங்கடேஷ், விதொச தாலுகா செயலாளர் அழகேந்தி ரன் ஆகியோர் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட வட்டாட்சியர் அரசு விதி முறைகளின் படி பரிசீலித்து முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.