சென்னை,ஜன.21- உச்சநீதிமன்றத்தில் நாட்டில் நிலவுகிற கடுமையான வறுமை யையும், பட்டினியையும் மூடிமறைக்கின்ற வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- நாட்டில் நிலவுகிற கடுமையான வறுமையையும், பட்டினியையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டிருக்கிறது. கடந்த பல வருடங்களாக இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்காக செயல்பட்டு வருகிற ``ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையின்படி 20 கோடி இந்தி யர்களுக்கு மேலாக நாள்தோறும் பசியோடு வெறும் வயிற்றுடன் உறங்கு கிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாடு முழுவதும் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது பாஜக ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர். இதன்படி இந்திய மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவரும், உலக மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினர்
இந்தியாவில் வறுமையில் இருப்பதாக வலுவான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒருநாளைக்கு ரூபாய் 150க்கும் கீழே சென்றுள்ளது. வரலாறு காணாத வகையில் பொருளாதார பேரழிவை மக்கள் சந்தித்து வருகிறார்கள். பிரதமர் மோடி ஆட்சியில் ஊழலே இல்லை என்று கூறுபவர்கள், அதானியின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னாலே பாஜக அரசின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லை என்று எவராவது மறுக்க முடியுமா? ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு இந்தியாவில் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையிலும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானி யும், அம்பானியும் போட்டி போட்டுக் கொண்டு சொத்துகளை குவித்து வருகிறார்கள். மோடியின் ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.