districts

img

குமரியில் கட்டுக்குள் வந்தது கொரோனா

நாகர்கோவில், மே 8- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா 4 ஆவது அலை துவங்கியுள்ள நிலையில் பாதிப்  புக்கள் ஏதுமின்றி கட்டுப்படுத் தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் கொரோனா 4 ஆவது அலை பரவத் தொடங்கி யதையடுத்து அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கன்னியா குமரி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்  கொள்ளப்பட்டது. இதையடுத்து நோய் தொற்று ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்  உட்பட நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பே இல்லாத நிலை நிலவுகிறது.  இந்த நிலையில் ஞாயிறன்று  மாவட்ட அளவில் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மாவட்ட நிர்வாக மும் சுகாதாரத்துறை அதிகாரி களும் நடவடிக்கை மேற்கொண் டனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் 650 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்  யப்பட்டது. அதன்படி அரசு மருத்  துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி வீடு  வீடாக சென்றும் சுகாதாரத்துறை யினர் தடுப்பூசி செலுத்தினர்.