districts

img

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள், தொழிற்சங்கத்தினர் மறியல்

ஆவணங்களை சமர்ப்பித்தால் இழப்பீடு பெற்றுத்தர அதிகாரிகள் ஒப்புதல்

மதுரை, மார்ச் 24-  மதுரை பெருநகர் மின் திட்டத்தில் ஒப்பந்த ஊழி யராக பணியாற்றிய எஸ்.காந்தி கடந்த திங்களன்று பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வின் நிர்வாகக்குழு உறுப்பி னராகவும் செயல்பட்டவர். உயிரிழந்த காந்தி பனி ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  ஒப்பந்த பணியாள ராக, பணி பாதுகாப்பு, ஓய் வூதியம், மருத்துவக்காப்பீடு எதுவுமின்றி குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய வர்.  இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த  மகன் சதீஷ்  ஒன்பதாம் வகுப் பும் இரண்டாவது மகன் முத்து நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். மிகவும் வறுமையில் உள்ள இக்குடும்பத்தினர் காந்தியின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தது. எனவே அவரது குடும்பத் திற்கு உரிய இழப்பீடும்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்றும் பணியின் போது காந்திக்கு உரிய பாது காப்பு ஏற்பாடு செய்து கொ டுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. மின் வாரியத்தில் நடை பெறும் மின்விபத்துகளில் ஒப்பந்த பணியாளர்களும் உயிர் இழந்து வருகின்றனர். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு அவர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதி யம் வழங்கி அவர்களை நிரந் தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தொடர்ச்சியாக  போராடி வரு கிறது.  

இந்நிலையில் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை கேட்டு,காந்தியின் உடலை வாங்க மறுத்து வியாழனன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு மின் திட்ட செயலா ளர் அறிவழகன், தலைவர் மாயத்தேவன் ஆகியோர் தலைமையில் சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. தெய்வராஜ்,உசிலை கோட்ட செயலாளர் நாகநாதன், கிளை தலைவர் சரவண குமார், மின் திட்ட ஒப்பந்த ஊழியர் பொறுப்பாளர் தங்கம் மற்றும்  மின் விபத் தில் பலியான காந்தியின்  குடும்பத்தினர், உறவினர் கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் போராட் டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிர்மான கழக அதிகாரி களை வரச்சொல்லி சம்பந்தப் பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது அதிகாரிகள், காந்தி யின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உடற்கூராய்வு அறிக்கை, வாரிசுதாரர்கள் சம்மத கடிதம், அரசுத் துறை யில் நிவாரணம் ஏதும் பெறப் படவில்லை என்ற வட்டாட்சி யர் சான்று  ஆகிய அரசு ஆவணங்களை மனுவாக தயார் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்றும் அவற்றின் மூலம் அவர்களுக்கான உரிய நிவாரண நிதியை பெற்றுத் தருகிறோம் என்று ஒப்புதல் அளித்தனர். அத னைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் காந்தியின் உடலை அவர்க ளது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.