அருமனை, செப்.1- கன்னியாகுமரி மா வட்டம் அருமனை அருகே முழுக்கோடு அழகனா மூலை ரேஷன் கடையில் கடந்த ஏழு ஆண்டுகளாக ராபி என்ற ராபின் ராஜன் என்பவர் பணியாற்றி வரு கிறார். மக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட் கள் வழங்காததால் மக்கள் பல முறை புகார்கள் கொடுத் தும் எந்தவித நடவடிக்கை யும் அதிகாரிகள் எடுக்க வில்லை. இது சம்மந்தமாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பி லும் புகார்கள் கொடுக் கப்பட்டது. அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் முழுக் கோடு ஊராட்சி தலைவர் சி.மரிய விலாசினி தலைமை யில் முழுக்கோடு கிராம நிர்வாக அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என தீர்மானித்து செப்டம்பர் 1 காலை 10 மணி முதல் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இப் போராட்டத்தில் அருமனை வட்டாரச் செயலாளர் சி.சசி குமார், மாநில குழு உறுப்பி னரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். லீமா றோஸ்மற்றும் முழுக்கோடு ஊராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.இந்த போராட்டம் நடக்கும் போது இரண்டு முறை அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர் போராட் டக்காரர்களின் கோரிக்கை யை ஏற்காததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.