districts

திண்டுக்கல் மன நல காப்பகங்களில் தொடரும் அத்துமீறல்

திண்டுக்கல்,  ஆக.3- திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள மன நல காப்ப கங்களில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தமிழ் நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமை களுக்கான  சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சங்  கத்தின் திண்டுக்கல் மாவட் டத்தலைவர் ஜெயந்தி. மாவட்டச்செயலாளர் பகத்  சிங்  ஆகியோர் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திண்டுக்கல் மாவட்டத்  தில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக் கான காப்பகங்கள் இயங்கி  வருகின்றன. இவ்வகை காப்  பகங்கள் அனைத்தும் முறை யாக அனுமதி பெற்றுத் தான் நடைபெற்று வருகின்  றதா? அவ்வாறு அனுமதி பெற்று இருப்பின் முறை யாக அங்கு ஆய்வு மேற் கொள்ளப்படுகிறதா? முறை யின்றி நடக்கும் மனநல காப்  பகங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

என்பது போன்ற எந்த கேள்விக்கும்  முறையாக மாவட்ட மாற்றுத்  திறனாளிகள் நல அலுவ லரோ அல்லது மாவட்ட  நிர்வாகமோ பதிலளிப்ப தில்லை.  சமீபத்தில் விழுப்பு ரம் அன்பு ஜோதி ஆசிரமத் தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்,  செங்கல்பட்டு பனங்காட்டுப்பாக்கத்தில் பாலியல் அத்துமீறல்,  நேற்று  புதுக்கோட்டை மாவட்டத் தில் நடைபெற்ற அத்துமீறல்  போன்றவை வெளிச்சத் திற்கு வந்துள்ளன. இந்த வரி சையில் திண்டுக்கல்  அம்மா   இல்லத்தில் சமீபத்தில் ஒரு  மனவளர்ச்சி குன்றிய மாற் றுத்திறனாளி காணாமல் போனதும்,  பின்னர் சடல மாக மீட்கப்பட்டதும்,  இதை  விசாரிக்க குழு அமைத்த தும்,  அந்த குழுவின் அறிக்  கையை இன்றுவரை வெளி யிடாமல் மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்து வருகிறது.  இதே போல்  பழனியில் அனு மதியில்லாமல் கோகுலம் காப்பகம் செயல்படுவதும்,  அதை கண்டும் காணாமல்  மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் உள்ளார்.  திண்டுக்கல்  மாவட்டம்  முழுவதும் மனநிலை பாதிக்  கப்பட்ட மாற்றுத்திறனாளி களின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது.  புதுக்கோட்டை,  செங்கல் பட்டு,  விழுப்புரம் மாவட்டங்  களைப்போல் புகார் வந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட வருமுன் காப்பதே சிறந் தது. மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து மனநல காப்ப கங்களிலும் உரிய ஆய்வு  நடத்த வேண்டும்.  தவறு செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.