districts

img

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்

திருநெல்வேலி, மார்ச் 20- நெல்லை மாவட்டம் முக்கூட லில் சிஐடியு கட்டுமான நல சங்கத்தின் இரண்டாவது ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .  இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜான் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநாட்டை சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் துவக்கி வைத்து பேசி னார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ரவி வாழ்த்தி பேசி னார். மாவட்ட தலைவர் சுரேஷ் நிறைவுரை ஆற்றினார். கூட்டத் தில் புதிய ஒன்றியத் தலைவராக தங்கதுரை, செயலாளராக ஜான் பாஸ்கர், பொருளாளராக அந்தோணி வியாகப்பன் துணைத்தலைவராக மகேஷ், துணைச் செயலாளராக ஜீவா உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன் றிய குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் மாதர் சங்க மாவட்  டச் செயலாளர் கற்பகம், வாலி பர் சங்கம் மாரியப்பன், பீடி  சங்க பொன்னுச்சாமி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். கட்டு மான பொருட்களை விலை யேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டன.