districts

img

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் துவக்கம் 12 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

மதுரை, ஜன. 4- மதுரையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாக அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கியது.  அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கலைஞர் நினைவு நூலகம், அதிநவீன வசதி கொண்டதாக 114 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. மதுரை நத்தம் சாலை யில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நூலகத்திற்கான இடம் தேர்வு செய் யப்பட்டு கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட் டது. மதுரையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து கட்டு மானப் பணிகள் துவங்கின. முதற் கட்டமாக ஊழியர்கள் தங்கும்  பகுதி, தரையை சமதளப்படுத்து தல் மற்றும் காங்கிரீட் உருளை அமைப்பதற்கான கட்டுமானப் பணி கள் துவங்கப்பட்டன. இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மதுரை பொதுப்பணித் துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்புப் பிரிவு கண்கா ணிப்புக்குழுவினர் மேற்பார்வை யில் நடைபெறும் என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.