தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 4-ஆவது மாநாடு பேரணி, பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் கார்த்திக் திரையரங்கம் முன்பு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர்கள் ஜான்சிராணி, நம்புராஜன், ஜீவா, பகத்சிங், வெங்கடேஷ், விஜயா பாஸ்கரன் உள்ளிட்டோர் பேசினர்.